Home கட்டுரைகள் எண்ண வண்ணங்கள் (நிறம்)

எண்ண வண்ணங்கள் (நிறம்)

by THFiAdmin
0 comment
எண்ண வரண்ணங்கள்

சமணம் மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களை கொண்டு, வெண்மை,
கருமை என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறது. எண்ணத்தின்
தன்மைக்கேற்றவாறு அவற்றை மேலும் விரித்து ஆறு வகைகளாகப் பிரிக்கும்.

1. கிருட்டினலேசியை – அடர்ந்த கருமை (Dark Black)
2. நீலலேசியை – நீலம் கலந்த கருமை (Black)
3. கபோதலேசியை – வெண்மை கலந்த கருமை (Grey)
4. பீதலேசியை – மஞ்சள் கலந்த வெண்மை (Pale yellow)
5. பத்மலேசியை – மங்கலான வெண்மை (Pale white)
6. சுக்லலேசியை – தூய வெண்மை (Pure White)

முதல் மூன்றும் கருமை எண்ணங்களாகும், மற்ற மூன்றும் வெண்மை
எண்ணங்களாகும்.

1. மிகுந்த கருமை – சதா சச்சரவு செய்யும் தன்மை, கடின மனயில்பு,
பழிவாங்கும் உணர்ச்சி, பெரியவர்கள் பேச்சை ஏற்காமை.

2. கருமை – சோம்பல், அறிவின்மை, சுகங்களில் அதிக நாட்டம்.

3. வெண்மை கலந்த கருமை – எதற்கெடுதாலும் அவசரப்படுதல்,
பயப்படுதல், மன உறுதியின்மை, காரணமேயின்றி பிறரை வெறுத்தல்.

4. மஞ்சள் கலந்த வெண்மை – நன்மை-தீமைகளை சீர்த்தூக்கிப் பார்த்தல்,
தயை, பரிவுத் தன்மை, தானம் செய்தல்.

5. மங்கலான வெண்மை – உண்மை, நேர்மை மனத்தினர், தியாக
சிந்தனை, மன்னிக்கும் இயல்பு, குருவை மதித்தல்.

6. தூய வெண்மை – சமநோக்கு உடைமை, விறுப்பு, வெறுப்பு
இன்மை, கோபம் கொள்ளாமை.

 

இப்போது சொல்லுங்கள் நீங்கள் எந்த நிறம்? 😉

இரா.பா,
சென்னை

You may also like

Leave a Comment